குறுந்தொகை - 377. குறிஞ்சி - தலைவி கூற்று
(“தலைவன் பிரிந்தமையால் என் உடல் மெலியவும் அவனதுஇயல்பு நினைந்து யான் ஆற்றினேன்; நீ ஆற்றாயாதல் என்?” என்றுதலைவி, வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கூறியது.)
மலரேர் உண்கண் மாணலந் தொலைய வளையேர் மென்றோள் ஞெகிழ்ந்ததன் தலையும் மாற்றா கின்றே தோழியாற் றலையே அறிதற் கமையா நாடனொடு செய்து கொண்டதோர் சிறுநன் னட்பே. |
5 |
- மோசி கொற்றனார். |
தோழி! தன் இயல்பு முற்றும் அறிதற்குப் பொருந்தாத தலைவனோடு யாம் செய்துகொண்ட ஒரு சிறிய நல்ல நட்பானது பூவினை யொத்த மையுண்ட கண்களின் மாட்சிமைப்பட்ட அழகு நீங்க வளையையுடைய அழகியமெல்லியதோள் நெகிழ்ந்ததன் மேலும் பரிகாரமாக ஆகின்றது; அது கருதி யான் ஆற்றா நிற்பவும் நீ ஆற்றினாயல்லை.
முடிபு: தோழி, நட்பு மாற்று ஆகின்று; ஆற்றலை,
கருத்து: தலைவனது இயல்பை உணர்ந்து யான் ஆற்றினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 377. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், யான், குறிஞ்சி, குறுந்தொகை, தலைவி, கூற்று, தோழி, ஆற்றினேன், எட்டுத்தொகை, சங்க