குறுந்தொகை - 372. நெய்தல் - தோழி கூற்று
(இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலைவன் சிறைப்புறத்தானாக,தலைவிக்குக் கூறுவாளாய், “இவ்வூரில் அலர் பெருகியது” என்றுதோழி வரைவின் இன்றியமையாமையைப் புலப்படுத்தியது.)
பனைத்தலைக், கருக்குடை நெடுமடல் குருத்தொடு மாயக் கடுவளி தொகுத்த நெடுவெண் குப்பைக் கணங்கொள் சிமைய வணங்குங் கானல் ஆழிதலை வீசிய வயிர்ச்சேற் றருவிக் கூழைபெய் எக்கர்க் குழீஇய பதுக்கை |
5 |
புலர்பதங் கொள்ளா வளவை அலரெழுந் தன்றிவ் வழங்க லூரே. |
|
- விற்றூற்று மூதெயினனார். |
பனையின் உச்சியிலுள்ள கருக்கையுடையநெடிய மடலானது குருத்தோடு மறைய விரைவையுடைய காற்றுக் கூட்டிய உயர்ந்த வெள்ளிய மணற்குவியலாகிய தொகுதியைக் கொண்ட சிகரத்தையுடைய வருத்துகின்ற கடற்கரையில் கடல் வீசிய கருமணற்சேற்றையுடைய அருவியால் கூந்தலினிடத்தே பெய்யப்படுகின்ற எக்கராகக் குவிக்கப்பட்ட குவியல் உலரும் செவ்வியை அடையாததற்குள் இந்த ஆரவாரத்தையுடைய ஊரில் பழிமொழி எழுந்தது.
முடிபு: பதுக்கை புலர்பதங் கொள்ளாவளவை இவ்வூரில் அலர் எழுந்தன்று.
கருத்து: இங்கே அலர் மிக்கது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 372. நெய்தல் - தோழி கூற்று, இலக்கியங்கள், அலர், நெய்தல், குறுந்தொகை, தோழி, கூற்று, பதுக்கை, புலர்பதங், சங்க, எட்டுத்தொகை, வீசிய