குறுந்தொகை - 371. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் வேறுபட்டதலைவியை நோக்கி, “நீ வேறுபடாமல் ஆற்றல்வேண்டும்” என்றதோழிக்கு, “யான் என்செய்கேன்! யான் ஆற்றியிருப்பினும் காமம்பெரிதாகலின் என் வரைத்தன்றி வேறுபாடு உண்டாயது” என்று தலைவிகூறியது.)
கைவளை நெகிழ்தலும் மெய்பசப் பூர்தலும் மைபடு சிலம்பின் ஐவனம் வித்தி அருவியின் விளைக்கும் நாடனொடு மருவேன் தோழியது காமமோ பெரிதே. |
|
- உறையூர் முதுகூற்றனார். |
தோழி! மேகங்கள் பொருந்துகின்ற மலைப்பக்கத்தில் மலைநெல்லை விதைத்து அருவியினாலே விளைக்கின்ற நாட்டையுடைய தலைவனால் என்கைகளில் உள்ள வளைகள் நெகிழ்தலையும் மெய்யின்கண்ணே பசலை பரத்தலையும் பெறேன்; ஆயினும் அக்காமம் பெரிது!
முடிபு: தோழி, நாடனொடு வளை நெகிழ்தலும் பசப்பூர்தலும் மருவேன்; காமம் பெரிது.
கருத்து: காமம் என்வரைத்தன்றி மிக்கது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 371. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, குறுந்தொகை, குறிஞ்சி, கூற்று, தோழி, பெரிது, மருவேன், காமம், நாடனொடு, சங்க, நெகிழ்தலும், எட்டுத்தொகை