குறுந்தொகை - 354. மருதம் - தோழி கூற்று
(பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனை நோக்கி, “நீ எம்மைவிரும்பாயாயின் எம்மை எம் தந்தையின் வீட்டிற்கு அழைத்துச் செல்வாயாக” என்று கூறும் வாயிலாகத் தோழி வாயில் மறுத்தது.)
நீர்நீ டாடிற் கண்ணுஞ் சிவக்கும் ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும் தணந்தனை யாயினெம் இல்லுய்த்துக் கொடுமோ அந்தண் பொய்கை எந்தை எம்மூர்க் கடும்பாம்பு வழங்குந் தெருவில் |
5 |
நடுங்கஞர் எவ்வம் களைந்த எம்மே. | |
- கயத்தூர்கிழார். |
நீரின் கண் நெடுநேரம் விளையாடினால் கண்களும் செந்நிறத்தை அடையும்; பன்முறை உண்டோரது வாயினிடத்தே தேனும் புளிப்பையுடைய தாகும்; ஆதலின் நீ எம்மைப் பிரிவை யாயின் அழகிய தண்ணிய பொய்கையையுடைய எம் தந்தையினது எம்ஊரின்கண்ணே நஞ்சின்கடுமையையுடைய பாம்புகள் ஓடும் தெருவில் நீ முன்பு நடுங்குதற்குரிய மிக்க துன்பத்தை நீக்கிய எம்மை எம்முடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவாயாக.
முடிபு: நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்; தேனும் புளிக்கும்;தணந்தனையாயின் எம்மை எம் இல் உய்த்துக் கொடுமோ.
கருத்து: எம்மை எம் தந்தையின் வீட்டிற்கு அழைத்துச் செல்வாயாக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 354. மருதம் - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, எம்மை, மருதம், தேனும், அழைத்துச், கூற்று, குறுந்தொகை, வீட்டிற்கு, புளிக்கும், கொடுமோ, தெருவில், தந்தையின், எட்டுத்தொகை, சங்க, வாயில், சிவக்கும்