குறுந்தொகை - 340. நெய்தல் - தலைவி கூற்று
(தலைவன் இரவுக்குறிக்கண் வந்து அளவளாவுவானென்று உணர்த்திய தோழியை நோக்கி, “என் நெஞ்சம் அவர் திறத்து யாம் வருந்தும் போதுஉடனிருந்து வருந்தாநின்றது” என்று கூறும் வாயிலாகத் தலைவி இரவுக்குறி வருதலின் ஏதம் கருதித் தான் அஞ்சுதலைக் குறிப்பித்து அதனை மறுத்தது.)
காமங் கடையிற் காதலர்ப் படர்ந்து நாமவர்ப் புலம்பி னம்மோ டாகி ஒருபாற் படுதல் செல்லா தாயிடை அழுவ நின்ற அலர்வேய் கண்டல் கழிபெயர் மருங்கி னொல்கி யோதம் |
5 |
பெயர்தரப் பெயர்தந் தாங்கு வருந்துந் தோழியவ ரிருந்தவென் நெஞ்சே. |
|
- அம்மூவனார். |
தோழி! அத்தலைவர் இருந்த என் நெஞ்சம் காமமானது மிக்கதாயின் தலைவரைநினைந்து சென்று நாம் அவர்திறத்தே வருந்தினேமாயின் நம்முடன்இருப்பதாகி ஒரு கூற்றிலேஅமையாமல் அவ்விரண்டினிடையிலும் கடற்கரைப் பரப்பிலேநின்ற மலரைப் பொருந்திய தாழை கழி பெயருகின்ற இடத்தில் தளர்ந்து வெள்ளம் பெயரும்பொழுதுதானும் பெயர்ந்தது போல வருந்தா நிற்கும்.
முடிபு: தோழி, நெஞ்சு காமம் கடையிற் படர்ந்து, நாம் புலம்பின்நம்மோடு ஆகி, ஒருபாற் படாதாகி வருந்தும்.
கருத்து: தலைவன் இரவுக்குறி வரின் யான் வருந்துவேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 340. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, நெய்தல், குறுந்தொகை, கூற்று, ஒருபாற், படர்ந்து, நாம், கடையிற், தோழி, தலைவன், எட்டுத்தொகை, சங்க, நெஞ்சம், வருந்தும், இரவுக்குறி