குறுந்தொகை - 339. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் வருந்தியதலைவியை நோக்கி, “தலைவனோடு அளவளாவிய காலத்தில்அவ்வொழுக்கம் நினக்கு இனிதாயிருந்தது; இப்பொழுது வருந்துதல்எவன்?” என்று தோழி கூறியது.)
நறையகில் வயங்கிய நளிபுன நறும்புகை உறையறு மையிற் போகிச் சாரற் குறவர் பாக்கத் திழிதரு நாடன் மயங்குமலர்க் கோதை நன்மார்பு முயங்கல் இனிதுமன் வாழி தோழி மாயிதழ்க் |
5 |
குவளை யுண்கண் கலுழப் பசலை யாகா வூங்கலங் கடையே. |
|
- பேயார். |
தோழி! வாசனையையுடையஅகிலினது விளங்கியசெறிந்த புனத்தின்கண் எழுந்த நறிய புகையானது துளிகள் அற்ற வெண்மேகத்தைப்போலச் சென்று மலைச்சாரலிலுள்ளகுறவர்களுடைய ஊரில் இறங்கும்நாட்டையுடைய தலைவன் பலவகை மலர்கள் கலந்த மாலையையணிந்த நின் நல்ல மார்பைத் தழுவுதல் கரிய இதழையுடைய குவளைமலரைப் போன்ற மையுண்ட கண்கள் அழும்படி பசலை உண்டாகாததன் முன்பு மிக இனியதாயிற்று.
முடிபு: தோழி, பசலையாகா ஊங்கலங்கடை நாடன் மார்பு முயங்கல் இனிதுமன்.
கருத்து: தலைவன் மணந்தக்கால் இன்புற்ற நீ அவன் நின்பொருட்டுப் பிரிந்தக்கால் துன்புறுதல் தக்கதன்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 339. குறிஞ்சி - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, தலைவன், இனிதுமன், பசலை, முயங்கல், சங்க, எட்டுத்தொகை, நாடன்