குறுந்தொகை - 336. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவன் இரவுக்குறி நயந்த காலத்துத் தோழி, “நீ இரவில் வருதல்தகாது; அதனால் இவள் வருந்துவள்” என்று அது மறுத்த வாய்பாட்டால்வரைவு கடாயது.)
செறுவர்க் குவகை யாகத் தெறுவர ஈங்கனம் வருபவோ தேம்பாய் துறைவ சிறுநா வொண்மணி விளரி யார்ப்பக் கடுமா நெடுந்தேர் நேமி போகிய இருங்கழி நெய்தல் போல |
5 |
வருந்தின ளளியணீ பிரிந்திசி னோளே. | |
- குன்றியனார். |
தேன் பரவுகின்றதுறையையுடைய தலைவ பகைவருக்கு மகிழ்ச்சி உண்டாக எமக்குத்துன்பமுண்டாகும்படி இங்கேஅறிஞர் வருவரோ? நீ பிரிந்த தலைவி சிறிய நாவையுடைய ஒள்ளிய மணிகள் விளரிப் பண்ணைப் போல முழங்க விரையும் குதிரையைப்பூண்ட நெடிய தேரினது சக்கரம் மேலே ஏறிப்போனமையால் நலிந்த கரிய கழியினிடத்துள்ள நெய்தல் மலரைப் போல வருத்தத்தையடைந்தாள்; இரங்கத்தக்காள்.
முடிபு: துறைவ, வருபவோ? நீ பிரிந்திசினோள் வருந்தினள்;அளியள்.
கருத்து: நீ இரவில் வருதல் நன்றன்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 336. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, துறைவ, வருபவோ, நெய்தல், சங்க, எட்டுத்தொகை, இரவில்