குறுந்தொகை - 334. நெய்தல் - தலைவி கூற்று
(“தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்தால் நீ ஆற்றும் வன்மைஉடையையோ?” என்று வினவிய தோழிக்கு, “அவன் பிரியின் என்உயிர் போம்” என்று தலைவி கூறியது.)
சிறுவெண் காக்கைச் செவ்வாய்ப் பெருந்தோ டெறிதிரைத் திவலை யீர்ம்புற நனைப்பப் பனிபுலந் துறையும் பல்பூங் கானல் விரிநீர்ச் சேர்ப்பன் நீப்பி னொருநம் இன்னுயி ரல்லது பிறிதொன் |
5 |
றெவனோ தோழி நாமிழப் பதுவே. | |
- இளம்பூதனார். |
தோழி! சிறிய வெண்மையையுடைய காக்கையினது செவ்விய வாயையுடைய பெரிய தொகுதி வீசுகின்ற அலைகளின் நீர்த்துளிகள் தம் ஈரமாகிய புறத்தை நனைக்க அக்குளிரை வெறுத்து தங்குதற்குஇடமாகிய பல மலர்களையுடைய சோலையையுடைய அகன்ற கடற்கரையையுடையதலைவன் பிரிந்தால் நாம் இழக்கும்பொருள் நமது இனிய உயிரையன்றி வேறொன்று யாது?
முடிபு: தோழி, சேர்ப்பன் நீப்பின் நாம் இழப்பது உயிரல்லதுபிறிதொன்று எவன்?
கருத்து: தலைவனது பிரிவை யான் ஆற்றேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 334. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, நெய்தல், தோழி, குறுந்தொகை, கூற்று, சேர்ப்பன், நாம், சங்க, எட்டுத்தொகை, பிரிந்தால்