குறுந்தொகை - 329. பாலை - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்து வருந்திய தலைவியைத் தோழிவற்புறுத்தினாளாக, "யான் ஆற்றுவேன்; என்கண்கள் துயிலாவாகிஅழுதன" என்று தலைவி கூறியது.)
கான விருப்பை வேனல் வெண்பூ வளிபொரு நெடுஞ்சினை உகுத்தலி னார்கழல்பு களிறுவழங்கு சிறுநெறி புதையத் தாஅம் பிறங்குமலை அருஞ்சுரம் இறந்தவர்ப் படர்ந்து பயிலிருள் நடுநாள் துயிலரி தாகித் |
5 |
தெண்ணீர் நிகர்மலர் புரையும் நன்மலர் மழைக்கணிற் கெளியவாற் பனியே. |
|
- ஓதலாந்தையார். |
தோழி! காட்டிலேவளர்ந்த இருப்பை மரத்தினது வேனிற்காலத்திலே மலரும் வெள்ளிய பூக்கள் காற்றால் அலைக்கப்பட்ட நெடியகொம்புகள் உதிர்ப்ப தனால் காம்பினின்றும்கழன்று களிறுகள்செல்லும் சிறிய வழி மறையும்படி பரக்கின்ற விளங்கிய மலைகளையுடையகடத்தற்கு அரிய பாலைநிலத்தை கடந்து சென்ற தலைவரை நினைந்து பயிலுகின்ற இருளையுடைய அரையிரவில் துயிலல் அரியதாகி தெள்ளிய நீரிடத்துள்ள ஒளியையுடைய மலரை ஒக்கும் நல்ல மலர்ந்த குளிர்ச்சியையுடைய கண்ணிற்கு நீர்த்துளிகள் எளிதிலேஉண்டாவன.
முடிபு: சுரம் இறந்தவர்ப் படர்ந்து துயில் அரிதாகிக் கண்ணிற்குப்பனி எளிது.
கருத்து: யான் ஆற்றியிருப்பவும் என் கண்கள் துயிலுதலொழிந்துஅழுதன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 329. பாலை - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, பாலை, குறுந்தொகை, கூற்று, படர்ந்து, இறந்தவர்ப், எட்டுத்தொகை, சங்க, யான்