குறுந்தொகை - 328. நெய்தல் - தோழி கூற்று
(வரைவிடை வைத்துத் தலைவன் பிரிந்த காலத்தில் வருந்தியதலைவியை நோக்கி, "அலரை அஞ்சற்க; அவ்வலர் நன்மையையேவிளைக்கும்" என்று தோழி கூறியது.)
சிறுவீ ஞாழல் வேரளைப் பள்ளி அலவன் சிறுமனை சிதையப் புணரி குணில்வாய் முரசின் இயங்குந் துறைவன் நல்கிய நாள்தவச் சிலவே அலரே வில்கெழு தானை விச்சியர் பெருமகன் |
5 |
வேந்தரொடு பொருத ஞான்றைப் பாணர் புலிநோக் குறழ்நிலை கண்ட கலிகெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே. |
|
- பரணர். |
சிறியமலரையுடைய ஞாழல் மரத்தின் வேரின்கண் அமைக்கப்பட்ட வளையிடத்திலுள்ள நண்டினது சிறிய வீடு அழியும்படி அலைகள் குறுந்தடிவாய்த்த முரசைப் போல வீசி முழங்கும் கடற்றுறையையுடைய தலைவன் தண்ணளிசெய்த நாட்கள் மிகவும் சிலவேயாகும்; பழிமொழியோ விற்படையைக் கொண்ட படைகளையுடைய விச்சியர்களுக்குத் தலைவன் அரசர்களோடு போர் செய்த காலத்தில் பாணர்களது புலியினது பார்வையைஒத்த நிலையினாற் காணப்பட்ட ஆரவாரமிக்க குறும்பூரினிடத்திலுள்ளார் செய்த முழக்கத்தினும் பெரிய முழக்கத்தையுடையதாயிற்று.
முடிபு: துறைவன் நல்கிய நாள் தவச்சிலவே; அலர் ஆர்ப்பினும்பெரிது.
கருத்து: அலர் மிகுதியாயிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 328. நெய்தல் - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, நெய்தல், தலைவன், குறுந்தொகை, நல்கிய, செய்த, துறைவன், அலர், ஞாழல், எட்டுத்தொகை, காலத்தில், சங்க