குறுந்தொகை - 325. நெய்தல் - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்தகாலத்து ஆற்றாளென எண்ணிக் கவலையுற்றதோழியை நோக்கி, "அவர் செல்லாரென நினைந்து போவீராக வெனச்சொன்னேன். இப்போது அவர் யாண்டுள்ளாரோ!" என்று தலைவிவருந்திக் கூறியது.)
சேறுஞ் சேறு மென்றலின் பண்டைத்தன் மாயச் செலவாச் செத்து மருங்கற்று மன்னிக் கழிகென் றேனே அன்னோ ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ கருங்கால் வெண்குருகு மேயும் |
5 |
பெருங்குளம் ஆயிற்றென் இடைமுலை நிறைந்தே. | |
- நன்னாகையார். |
தோழி! செல்வேம் செல்வேமென்று தலைவன் பலகாற் சொல்லியதனால் முன்புஅவன் கூறிய பொய்ச் செலவாக எண்ணி என் பக்கத்தி னின்றும் நீங்கி நிலைபெற்று நீங்குக என்றேன்; ஐயோ! நமக்குப் பற்றுக்கோடாகிய தலைவன் எங்கே இருக்கின்றானோ! என் நகில்களின் இடையிலுள்ள இடம்அவனது பிரிவால் அழுத என் கண்ணீரால் நிறைந்து கரிய காலையுடைய வெள்ளியநாரை உணவை உண்ணும் பெரியகுளம் போல ஆயிற்று.
முடிபு: என்றலின், செத்து, கழிக என்றேன்; எந்தை யாண்டுளன்கொல்லோ! என் இடைமுலை குளமாயிற்று.
கருத்து: தலைவன் பிரிவை யான் ஆற்றேனாயினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 325. நெய்தல் - தலைவி கூற்று, தலைவன், இலக்கியங்கள், நெய்தல், குறுந்தொகை, தலைவி, கூற்று, இடைமுலை, என்றேன், செத்து, சங்க, எட்டுத்தொகை, அவர்