குறுந்தொகை - 324. நெய்தல் - தோழி கூற்று
(தலைவனிடம் தலைவி இற்செறிக்கப்படுவாளென் பதனைக் கூறியதோழியை நோக்கி, "யான் ஆண்டு வந்து இரவுக் குறியில் தலைவியைக்கண்டு செல்வேன்; அப்பால் வரைந்து கொள்வேன்" என்று தலைவன்கூற, அது கேட்ட தோழி, "நீ நின் அன்பின் மிகுதியால் வழியின் ஏதம்பாராது வருகின்றாய்; இவள் அதற்கு அஞ்சுவாள்" என்று கூறி வரைவுகடாயது.)
கொடுங்கால் முதலைக் கோள்வ லேற்றை வழிவழக் கறுக்குங் கானலம் பெருந்துறை இனமீன் இருங்கழி நீந்தி நீநின் நயனுடை மையின் வருதி யிவடன் மடனுடை மையின் உயங்கும் யானது |
5 |
கவைமக நஞ்சுண் டாஅங் கஞ்சுவல் பெருமவென் னெஞ்சத் தானே. |
|
- கவை மகனார். |
தலைவ நீ நினது அன்புடைமையால் வளைந்த கால்களையுடைய முதலையினது கொல்லுதல் வல்ல ஆணானது வழியினிடத்தே பிறர் செல்லுவதை நீக்கும் கானலையுடைய பெரிய கடற்றுறையின்கண் திரளாகிய மீன்களை யுடையகரிய கழியை நீந்திக்கடந்து வருகின்றாய்; இத்தலைவி தன்அறியாமையையுடைமையினால் வருந்துவாள்; யான்! என் மனத்தினுள்ளே இரட்டைப் பிள்ளைகள் நஞ்சுண்டால் இருவர்திறத்தும் ஒரு தாய் வருந்துவது போல நீ அங்ஙனம் வருதலை அஞ்சுவேன்.
முடிபு: பெரும, நீ நயனுடைமையின் நீந்தி வருதி; இவள் தன்மடனுடைமையின் உயங்கும்; யான் அஞ்சுவல்.
கருத்து: நீ இரவில் வருதல் நன்றன்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 324. நெய்தல் - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, நெய்தல், யான், குறுந்தொகை, மையின், வருதி, நீந்தி, உயங்கும், இவள், எட்டுத்தொகை, வருகின்றாய், சங்க