குறுந்தொகை - 322. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைமகனது வரவு நீட்டித்ததாகத் தோழி இயற்பழித்த விடத்து,தலைவன் வர, அஃதுணர்ந்த தலைவி, "நாம் அவரூருக்குப் போய்அவரோடு பழகுவோம்" என்று கூறியது.)
அமர்க்க ணாமான் அஞ்செவிக் குழவி கானவ ரெடுப்ப வெரீஇ யினந்தீர்ந்து கான நண்ணிய சிறுகுடிப் பட்டென இளைய ரோம்ப மரீஇயவ ணயந்து மனையுறை வாழ்க்கை வல்லி யாங்கு |
5 |
மருவின் இனியவு முளவோ செல்வாந் தோழி யொல்வாங்கு நடந்தே. |
|
- ஐயூர் முடவனார். |
தோழி! மேவுதலையுடைய காட்டுப் பசுவின் அழகியகாதுகளையுடைய கன்று வேட்டுவர் எழுப்புவதனால் அஞ்சித் தன் இனத்தினின்றும் பிரிந்து சென்று காட்டினிடத்துப் பொருந்திய சிறிய ஊரிலேஅகப்பட்டதாக இளைய மகளிர்பாதுகாப்பக் கலந்து அவ்விடத்தைவிரும்பி வீட்டின்கண் உறையும் வாழ்க்கையில் வன்மை பெற்றது போல கலந்து பழகுதலைக் காட்டிலும் இனிய பொருள்களும் இருக்கின்றனவோ? ஆதலின் நாமும் தலைவரோடு மருவும் பொருட்டு இயன்ற அளவில் நடந்து தலைவன் இருக்குமிடத்திற்குச் செல்வேம்.
முடிபு: தோழி, ஆமான்குழவி எடுப்ப வெரீஇத் தீர்ந்து குடிப்பட்டென, ஓம்ப மரீஇ நயந்து வில்லியாங்கு, மருவின் இனியவும் உளவோ?நடந்து செல்வாம்.
கருத்து: தலைவன் இருக்குமிடத்துக்கு யான் போவோமாக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 322. குறிஞ்சி - தலைவி கூற்று, தோழி, இலக்கியங்கள், தலைவி, குறுந்தொகை, தலைவன், குறிஞ்சி, கூற்று, கலந்து, நடந்து, மருவின், இளைய, எட்டுத்தொகை, சங்க