குறுந்தொகை - 319. முல்லை - தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்தது கண்ட தலைவிவேறுபட்டாளாக, "நீ ஆற்ற வேண்டும்’’ என்று வற்புறுத்திய தோழியைநோக்கி, "நான் எங்ஙனம் ஆற்றுவேன்? என் உயிர் நில்லாது போலும்"என்று தலைவி கூறியது.)
மானேறு மடப்பிணை தழீஇ மருள்கூர்ந்து கான நண்ணிய புதன்மறைந் தொடுங்கவும் கையுடை நன்மாப் பிடியொடு பொருந்தி மையணி மருங்கின் மலையகஞ் சேரவும் மாலைவந் தன்று மாரி மாமழை |
5 |
பொன்னேர் மேனி நன்னலஞ் சிதைத்தோர் இன்னும் வாரார் ஆயின் என்னாந் தோழிநம் இன்னுயிர் நிலையே. |
|
- தாயங் கண்ணனார். |
தோழி! ஆண்மான்கள் மடப்பம் பொருந்திய பெண்மான்களைத்தழுவி மயக்கம் மிக்கு காட்டினிடத்துப் பொருந்திய புதலின் கண்ணே மறைந்து ஒடுங்கியிருக்கும்படியும் துதிக்கையையுடைய நல்ல ஆண்யானைகள் பெண் யானைகளோடு சேர்ந்து மேகங்களைஅணிந்த பக்கத்தையுடைய மலையிடத்தை அடையும் படியும் கார்காலத்துக்குரிய பெரிய மழை மாலைக்காலத்திலே வந்தது; பொன்னையொத்த எனது மேனியின் நல்ல அழகைக் கெடுத்த தலைவர் இன்னும்வாரார் ஆயின்! நம்முடையஇனிய உயிர் நிலை எத்தகையது ஆகும்?
முடிபு: தோழி, மானேறு ஒடுங்கவும், மா சேரவும், மழை வந்தன்று; சிதைத்தோர் வாராராயின் உயிர்நிலை என்னாம் ?
கருத்து: தலைவர் வாராவிடின் என் உயிர் நீங்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 319. முல்லை - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, முல்லை, உயிர், குறுந்தொகை, கூற்று, பொருந்திய, தோழி, நல்ல, தலைவர், ஆயின், சேரவும், சங்க, வந்தது, மானேறு, எட்டுத்தொகை, சிதைத்தோர்