குறுந்தொகை - 318. நெய்தல் - தலைவி கூற்று
(தலைவன் சிறைப்புறத்தே நிற்பத்தோழிக்குக் கூறுவாளாய்,"தலைவன் பிரியேனென்று சூள்செய்தான். அதனைக் காப்பாற்றுதல்அவன் கடன். அதனை அவனே அறியவேண்டுமன்றி யான் கூறுதலாற்பயனில்லை" என்று தலைவி கூறி விரைவில் வரைய வேண்டுமென்னும்குறிப்பை உணர்த்தியது.)
எறிசுறாக் கலித்த இலங்குநீர்ப் பரப்பின் நறுவீ ஞாழலொடு புன்னை தாஅய் வெறியயர் களத்தினில் தோன்றுந் துறைவன் குறியா னாயினும் குறிப்பினும் பிறிதொன் றறியாற் குரைப்பலோ யானே யெய்த்தவிப் |
5 |
பணையெழின் மென்றோ ளணைஇய வந்நாட் பிழையா வஞ்சினஞ் செய்த கள்வனும் கடவனும் புனைவனுந் தானே. |
|
- அம்மூவனார். |
தோழி! அடைந்தாரை எறிகின்றசுறாமீன்கள் மிக்க விளங்கிய கடற்பரப்பினிடத்து நறிய ஞாழற்பூவோடு புன்னை மலரும் பரவி வெறியாடும்இடத்தைப் போலத் தோன்றுகின்ற துறையையுடையதலைவன் என்னை வரைந்து கொள்ளுதலை நெஞ்சுட் குறிக்கொள்ளானாயினும் குறிக்கொண்டானாயினும் அயலார் வரைவாகிய வேறு ஒன்று நேருமென்பதைஅறியாத அவனுக்கு நான் சொல்லுவேனோ? இப்பொழுது இளைத்த இந்த மூங்கிலைப் போன்ற அழகையுடைய மெல்லிய தோள்களை அணைந்த அந்த நாளிலே தான் நம் திறத்துப் பிழையாமையைப் புலப்படுத்தும் சூளைச்செய்த வஞ்ச நெஞ்சுடையவனும் அவ்வஞ்சினத்தை நிறைவேற்றும் கடப்பாடுடையவனும் நமக்கோர் புணைபோன்று இருப்பவனும் அத்தலைவனே; அன்றிப் பிறரில்லை.
முடிபு: துறைவன் குறியானாயினும் குறிப்பினும், அறியாற்கு யான்உரைப்பலோ! அணைஇய அந்நாள் வஞ்சினஞ் செய்து கள்வனும் கடவனும்புணைவனும் தானே.
கருத்து: தலைவன் தன் மொழி தவறாது வரைந்து கொள்ளவேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 318. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, நெய்தல், தலைவன், கூற்று, குறுந்தொகை, கள்வனும், தானே, வரைந்து, வஞ்சினஞ், துறைவன், சங்க, புன்னை, எட்டுத்தொகை, குறிப்பினும்