குறுந்தொகை - 297. குறிஞ்சி - தோழி கூற்று
(தோழி, “இனித் தலைவனுடன் சென்று அவனை மணந்து வாழ்தலே செயற்குரியது” என்று தலைவிக்குக் கூறியது.)
அவ்விளிம் புரீஇய கொடுஞ்சிலை மறவர் வைவார் வாளி விறற்பகை பேணார் மாறுநின் றிறந்த ஆறுசெல் வம்பலர் உவலிடு பதுக்கை ஊரின் தோன்றும் கல்லுயர் நனந்தலை நல்ல கூறிப் |
5 |
புணர்ந்துடன் போதல் பொருளென உணர்ந்தேன் மன்றவவர் உணரா வூங்கே. |
|
- காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார். |
மேல் விளிம்பை உருவிய கொடிய வில்லையுடைய மறச்சாதியாருடைய கூர்மையையுடைய நீண்ட அம்பினது வெற்றியையுடையபகையினின்றும் தம்மைப் பாதுகாவாராகி எதிரே நின்று இறந்து பட்டவழிப்போவார் மீது தழையைஇட்டுவைத்த குவியல்கள் ஊரைப்போலத் தோன்றுகின்ற மலைகள்ஓங்கியுயர்ந்த அகன்ற இடத்தில் ஆண்டுப்போய்வரைவேமென்பது முதலிய நல்ல சொற்களைக் கூறி தலைவனோடு சேர்ந்துபோதலே செய்யத்தக்க காரிய மென்று தலைவர் உணர்வதற்கு முன்னர் நிச்சயமாக யான் உணர்ந்தேன்.
முடிபு: நனந்தலை, கூறிப்போதல் பொருளென அவர் உணராவூங்கே உணர்ந்தேன்.
கருத்து: தலைவனுடன் சென்று நீ மணத்தலே நன்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 297. குறிஞ்சி - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், குறிஞ்சி, கூற்று, உணர்ந்தேன், குறுந்தொகை, நல்ல, பொருளென, நனந்தலை, தலைவனுடன், எட்டுத்தொகை, சங்க, சென்று