குறுந்தொகை - 294. நெய்தல் - தோழி கூற்று
(பகற்குறிக்கண் தலைவன் சிறைப்புறமாக நிற்ப, தோழி தலைவிக்குக்கூறுவாளாகி, “பலரோடு நாம் விளையாடும்போது தலைவன் வந்துஅளவளாவிச் சென்றால் அலருண்டாகும்; அதனால் நாம் இன்பத்தையேபெறுவோம். எப்பொழுதும் அருகில் தலைவன் இருத்தலின் தாய்அறிந்தாள்; இனி இல்லிற்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாள்; இதற்குத்தலைவனே காரணம் ஆயினன்” என்று கூறியது.)
கடலுட னாடியும் கான லல்கியும் தொடலை யாயமொடு தழுவணி யயர்ந்தும் நொதுமலர் போலக் கதுமென வந்து முயங்கினன் செலினே யலர்ந்தன்று மன்னே தித்தி பரந்த பைத்தக லல்குல் |
5 |
திருந்திழை துயல்வுக்கோட் டசைத்த பசுங்குழைத் தழையினும் உழையிற் போகான் தான்தந் தனன்யாய் காத்தோம் பல்லே. |
|
- அஞ்சிலாந்தையார். |
கடலிடத்தே ஒருங்கேநீர் விளையாட்டுப் புரிந்தும் கடற்கரைச்சோலையினிடத்தே தங்கியும் மாலையையுடைய மகளிர் கூட்டத்தோடு குரவை கோத்து ஆடியும் அயலாரைப் போல விரைவாக வந்து தலைவன் தழுவிச் செல்வானாயின் அலருண்டாயிற்று; இப்பொழுது அங்ஙனம் செய்யாமல் தேமல் படர்ந்த விரிந்து அகன்ற அல்குலினது திருத்தமுறச் செய்த அணிகலன்கள் அசைதலையுடையபக்கத்தின்கண் கட்டிய பசியதளிராற் செய்த தழையைக் காட்டினும் மிக அணிமையிலிருந்து போகானாகி அக்காரணத்தால் தாய் நம்மை இற்செறித்துக் காவல்செய்தலை தானே உண்டாக்கினன்.
முடிபு: ஆடியும் அல்கியும் அயர்ந்தும் முயங்கினன் செலின்,அலர்ந்தன்று மன்; உழையிற் போகான், தான் ஓம்பலைத் தந்தனன்.
கருத்து: தலைவனை யறிந்த தாய் நின்னை இற்செறிக்கக் கருதினாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 294. நெய்தல் - தோழி கூற்று, இலக்கியங்கள், தலைவன், தோழி, கூற்று, நெய்தல், குறுந்தொகை, ஆடியும், போகான், உழையிற், தாய், செய்த, நாம், எட்டுத்தொகை, சங்க, வந்து, முயங்கினன்