குறுந்தொகை - 293. மருதம் - தலைவி கூற்று
(பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்குத் தூதாக வந்த தோழியைநோக்கி, “தலைவன் ஈண்டுறைவது தெரியின் பரத்தை இங்கு வந்துஅவனைக் கொண்டு செல்வள்” என்று கூறியது.)
கள்ளிற் கேளிர் ஆத்திரை யுள்ளூர்ப் பாளை தந்த பஞ்சியங் குறுங்காய் ஓங்கிரும் பெண்ணை நுங்கொடு பெயரும் ஆதி யருமன் மூதூ ரன்ன அயவெள் ளாம்பல் அம்பகை நெறித்தழை |
5 |
தித்திக் குறங்கின் ஊழ்மா றலைப்ப வருமே சேயிழை யந்திற் கொழுநற் காணிய அளியேன் மன்னே. |
|
- கள்ளில் ஆத்திரையனார். |
தோழி! கள்ளைக்குடிக்கும் விருப்பத்தை உடையவர்களது பயணம் ஊரினகத்துள்ளபாளையினால் ஈனப்பட்ட நாரையுடைய குறிய காய்களைக்கொண்ட உயர்ந்த கரிய பனையினது நுங்கைக் கைக்கொண்டுமீள்வதற்கு இடமாகிய ஆதி அருமனுக்குரிய பழைய ஊரைப் போன்ற நீரில் வளர்ந்தவெள்ளாம்பலினது அழகிய மாறுபட்ட முழு நெறியைஉடைய தழையுடை தேமலை உடைய துடையின்கண் முறையே மாறி மாறிஅசைய பொன்னால் செய்த செவ்வியஅணிகலன்களை உடைய பரத்தை அவ்விடத்திலே தலைவனைக் காணும் பொருட்டு வருவாள்; நான் இரங்கத் தக்கேன்.
முடிபு: மூதூரன்ன சேயிழை, கொழுநற்காணிய, அலைப்ப வரும;யான் அளியேன்.
கருத்து: தலைவனை மீட்டும் பரத்தை கைக் கொள்வாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 293. மருதம் - தலைவி கூற்று, இலக்கியங்கள், மருதம், பரத்தை, குறுந்தொகை, தலைவி, கூற்று, அளியேன், உடைய, சேயிழை, சங்க, எட்டுத்தொகை, வந்த