குறுந்தொகை - 247. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவன் விரைவில் வரைந்து கொள்வான் என்று தலைவியிடம் தோழி கூறியது.)
எழின்மிக வுடைய தீங்கணிப் படூஉம் திறவோர் செய்வினை அறவ தாகும் கிளையுடை மாந்தர்க்குப் புணையுமா மிவ்வென ஆங்கறிந் திசினே தோழி வேங்கை வீயா மென்சினை வீயுக யானை |
5 |
ஆர்துயில் இயம்பு நாடன் மார்புரித் தாகிய மறுவில் நட்பே. |
|
-சேந்தம் பூதனார். |
தோழி! வேங்கை மரத்தினது கெடாத மெல்லிய கிளையில் இருந்து மலர்கள் உதிர அங்ஙனம் உதிரும் இடத்திலே யானையானது பெறுதற்கரிய துயில் செய்வதனால் உயிர்ப்பின் ஒலி உண்டாகும் நாட்டை உடைய தலைவனது மார்பை உரியதாகப் பெற்ற குற்றமற்ற நட்பானது மிக அழகுடையது; இவ்விடத்தில் அணிமைக் காலத்தே உண்டாகும்; திறமை உள்ளோர் செய்யும் காரியம் அறத்தொடு பொருந்தியதாகும்; சுற்றத்தை உடைய மக்களுக்கு இவை பற்றுக்கோடும் ஆகும் என்று அங்ஙனம் அறிந்தேன்.
முடிபு: தோழி, நாடன் நட்பு எழில் உடையது; அணிப்படூஉம்;வினை அறவதாகும்; இவ் புணையும் ஆம்; ஆங்கு அறிந்திசின்.
கருத்து: தலைவன் நின்னை விரைவில் வரைந்து கொள்வான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 247. குறிஞ்சி - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, அங்ஙனம், நாடன், உடைய, வேங்கை, உண்டாகும், தலைவன், எட்டுத்தொகை, சங்க, விரைவில், வரைந்து, கொள்வான்