குறுந்தொகை - 235. பாலை - தலைவன் கூற்று
(வரைந்து கொள்வதற்கு முன் பிரிந்து சென்ற தலைவன், தலைவிபால் மீளும்போது வாடைக்குக் கூறுவானாகி, “வாடையே, அதோதெரிகின்றதே, அது தலைவியின் ஊர்; நீ அவளைப் பாதுகாப்பாயாக”என்று பாகனுக்கு உணர்த்தியது.)
ஓம்புமதி வாழியோ வாடை பாம்பின் தூங்குதோல் கடுக்குந் தூவெள் ளருவிக் கல்லுயர் நண்ணி யதுவே நெல்லி மரையின மாரு முன்றிற் புல்வேய் குரம்பை நல்லோ ளூரே. |
5 |
- மரயேண்டனார். |
வாடைக் காற்றே நெல்லிக்காயை மரையின் திரள்உண்ணுகின்ற முன்னிடத்தை உடைய புல்லால் வேயப்பட்ட குடிசைகளை உடைய நல்ல தலைவியினது ஊரானது பாம்பின் நாலுகின்ற உரியை ஒக்கும் தூய வெள்ளிய அருவியை உடைய மலையின் உயரத்திலே பொருந்தியது; அங்கேயுள்ள தலைவியை நீ பாதுகாப்பாயாக; நீ வாழ்வாயாக!
முடிபு: வாடை, நல்லோள் ஊர் நண்ணியது; ஓம்புமதி; வாழி.
கருத்து: மலையின் உச்சியிலே தோன்றுவது தலைவியினதுஊராகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 235. பாலை - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், பாலை, உடைய, குறுந்தொகை, கூற்று, பாம்பின், மலையின், சங்க, எட்டுத்தொகை, ஓம்புமதி, வாடை