குறுந்தொகை - 236. நெய்தல் - தோழி கூற்று
(வரைவிடை வைத்துத் தலைவியைப் பிரிந்து செல்ல எண்ணியதலைவன், ”இவளை வருந்தாது பாதுகாப்பாயாக” என்று தோழிக்குக்கூற, அவள், “இவளைப் பிரிந்தால் என்றும் பிரிந்தே இருக்க வேண்டும்;அங்ஙனம் செய்வாயேல் நீ உண்ட நலனைத் தந்து செல்வாயாக” என்றுகூறு முகத்தால் அவன் பிரிவைத் தடுத்தது.)
விட்டென விடுக்குநாள் வருக அதுநீ நேர்ந்தனை யாயின் தந்தனை சென்மோ குன்றத் தன்ன குவவுமணல் அடைகரை நின்ற புன்னை நிலந்தோய் படுசினை வம்ப நாரை சேக்கும் |
5 |
தண்கடற் சேர்ப்பநீ உண்டவென் னலனே. | |
- நரிவெரூஉத் தலையார். |
குன்றைப் போன்ற குவிதலை உடைய மணல்அடைந்த கரையினிடத்து வளர்ந்து நின்ற புன்னை மரத்தினது நிலத்தைத்தோய்த்த தாழ்ந்த கிளையில் புதியநாரை தங்கும் தண்ணிய கடற்கரையைஉடைய தலைவ இவளை நீ கைவிட்டாய் என விடுக்கும் காலம் வருவதாக! அதற்கு நீ உடம்படுவாயாயின் நீ நுகர்ந்த என் பெண்மை நலத்தை தந்து செல்வாயாக.
முடிபு: சேர்ப்ப, நாள் வருக; நேர்ந்தனையாயின் நலன் தந்துசென்மோ.
கருத்து: இவளைப் பிரிந்து செல்லல் தகாது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 236. நெய்தல் - தோழி கூற்று, இலக்கியங்கள், நெய்தல், குறுந்தொகை, தோழி, கூற்று, நின்ற, புன்னை, வருக, சங்க, எட்டுத்தொகை, பிரிந்து, தந்து