குறுந்தொகை - 226. நெய்தல் - தலைவி கூற்று
(தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் தலைவி ஆற்றாள் எனக் கவன்ற தோழியை நோக்கி, “தலைவன் என்னை மணந்த பின் என் நலன் இழந்தேன்” என்று தலைவி வருந்திக் கூறியது.)
பூவொடு புரையுங் கண்ணும் வேயென விறல்வனப் பெய்திய தோளும் பிறையென மதிமயக் குறூஉ நுதலு நன்றும் நல்லமன் வாழி தோழி அல்கலும் தயங்குதிரை பொருத தாழை வெண்பூக் |
5 |
குருகென மலரும் பெருந்துறை விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ வூங்கே. |
|
- மதுரை எழுத்தாளனார் சேந்தம்பூதனார். |
தோழி! இரவுதோறும் விளங்கிய அலைகளால் மோதப்பட்ட தாழையினது வெள்ளிய பூ நாரையைப் போல மலர்தலைச் செய்வதற்குஇடமாகிய பெரியதுறைகளை உடைய அகன்ற நீர்ப்பரப்பை உடையசேர்ப்பனோடு நகுவதற்கு முன்பு தாமரை மலரை ஒத்த கண்களும் மூங்கிலைப்போல வெற்றியை உடைய அழகைப் பெற்ற தோள்களும் பிறை என்றுகருதும்படி அறிவை மயங்கச் செய்யும் நெற்றியும் மிகவும் நல்லனவாக இருந்தன; அந்நிலைஇப்பொழுது கழிந்தது!
முடிபு:தோழி, சேர்ப்பனொடு நகாஅவூங்கு, கண்ணும் தோளும்நுதலும் நல்லமன்!
கருத்து: தலைவனது பிரிவினால் என் மேனி நலம் அழிந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 226. நெய்தல் - தலைவி கூற்று , தலைவி, இலக்கியங்கள், நெய்தல், குறுந்தொகை, கூற்று, தோழி, சேர்ப்பனொடு, உடைய, சங்க, எட்டுத்தொகை, கண்ணும், நல்லமன்