குறுந்தொகை - 220. முல்லை - தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற கார் காலம் வரவும் அவன் வாராமையால், “தாம் வர வேண்டிய இக் காலத்தும் வந்திலர்; இனி என் செய்வேன்!” என்று தோழிக்குத் தலைவி கூறியது.)
பழமழைக் கலித்த புதுப்புன வரகின் இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை இருவிசேர் மருங்கிற் பூத்த முல்லை வெருகுசிரித் தன்ன பசுவீ மென்பிணி குறுமுகை அவிழ்ந்த நறுமலர்ப் புறவின் |
5 |
வண்டுசூழ் மாலையும் வாரார் கண்டிசிற் றோழி பொருட்பிரிந் தோரே. |
|
- ஒக்கூர் மாசாத்தியார். |
தோழி! பொருள்ஈட்டி வரும் பொருட்டு நம்மை இங்கு வைத்துப் பிரிந்ததலைவர் பழைய மழையினால் தழைத்த புனத்தில் உள்ள புதிய வரகினது ஆண் மான்மேய்ந்தமையால் குறைதலை உடைய நுனியை உடையகதிர் அரிந்த தாள் சேர்ந்த பக்கத்தில் மலர்ந்த முல்லைக் கொடியினது காட்டுப் பூனை சிரித்தாற் போன்ற தோற்றத்தைஉடைய செவ்விப் பூவின்மெல்லிய பொதிதலை உடைய சிறிய அரும்புகள் மலர்ந்த நறிய மலர்களை உடையமுல்லை நிலத்தில் வண்டுகள்அம் மலரை ஊதும் பொருட்டுச் சுற்றுகின்ற மாலைக்காலத்திலும் வாராராயினார் இதனைக் கருதுவாயாக.
முடிபு: தோழி, பிரிந்தோர் மாலையும் வாரார்; கண்டிசின்.
கருத்து: தலைவர் தாம் கூறிச் சென்ற பருவம் வரவும் வந்திலர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 220. முல்லை - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, முல்லை, குறுந்தொகை, கூற்று, தோழி, வாரார், மலர்ந்த, மாலையும், உடைய, கூறிச், எட்டுத்தொகை, சங்க, சென்ற, வரவும், வந்திலர்