குறுந்தொகை - 221. முல்லை - தலைவி கூற்று
(தலைவன் கூறிச்சென்ற பருவம் வந்தது கண்டு கவன்ற தலைவியை, “நீ ஆற்றியிருத்தல் வேண்டும்” என வற்புறுத்திய தோழியை நோக்கி, “முல்லை மலர்ந்தது; கார்காலம் வந்து விட்டது; அவர் வந்திலர்; யான் எங்ஙனம் ஆற்றியிருப்பேன்?” என்று தலைவி கூறியது.)
அவரோ வாரார் முல்லையும் பூத்தன பறியுடைக் கையர் மறியினத் தொழியப் பாலொடு வந்து கூழொடு பெயரும் யாடுடை இடைமகன் சென்னிச் சூடிய வெல்லாம் சிறுபசு முகையே. |
5 |
- உறையூர் முதுகொற்றனார். |
தோழி! முல் லைகளும்மலர்ந்தன; பறியோலையை உடையகையினை உடையார் குட்டிகளைஉடைய ஆட்டின் திரளோடு சென்று தங்க பாலைக் கொணர்ந்து வந்து பாற்சோற்றைப் பெற்று மீண்டு செல்கின்ற ஆடுகளை உடைய இடையன் தன் தலையில் அணிந்து கொண்டன யாவும் சிறிய செவ்வியை உடைய அம்முல்லையின் அரும்புகளே ஆகும்; அத்தலைவர் இன்னும் வாராராயினர்.
முடிபு: முல்லையும் பூத்தன; இடைமகன் சூடியவெல்லாம்முகையே; அவர் வாரார்.
கருத்து: கார்ப்பருவம் வரவும் தலைவர் வந்திலர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 221. முல்லை - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, முல்லை, வந்து, கூற்று, குறுந்தொகை, பூத்தன, இடைமகன், உடைய, முல்லையும், வந்திலர், சங்க, அவர், எட்டுத்தொகை, வாரார்