குறுந்தொகை - 201. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவனும் தலைவியும் மணந்துகொண்டு இல்லறம் நடத்தும்மனைக்கண் சென்ற தோழி, “வரைந்துகொள்ளும் வரையில் நீ வேறுபடாமல் எங்ஙனம் ஆற்றியிருந்தாய்” என்று கூற, “நான் அங்ஙனம் ஆற்றியிருக்கும் வண்ணம் அயன்மனைக் கிழத்தி முன்பு தலைவன் வரவைக் கூறினாள்; அவள் வாழ்க!” என்று தலைவி சொல்லியது.)
அமிழ்த முண்கநம் அயலி லாட்டி பால்கலப் பன்ன தேக்கொக் கருந்துபு நீல மென்சிறை வள்ளுகிர்ப் பறவை நெல்லி யம்புளி மாந்தி யயலது முள்ளி லம்பணை மூங்கிற் றூங்கும் |
5 |
கழைநிவந் தோங்கிய சோலை மலைகெழு நாடனை வருமென் றாளே. |
|
- ......... |
தோழி! அயன்மனைக்கிழத்தி பாலைக் கலந்தாற்போன்றஇனிமையையுடைய தேமாம்பழத்தைத் தின்று கரிய மெல்லியசிறகுகளையும் கூரிய நகங்களையும்உடைய வௌவால் நெல்லியினதுபுளித்த காயை உண்டு அயலிலுள்ளதாகிய முள்ளில்லாதஅழகிய பருத்த மூங்கிலின் கண்ணே தொங்குகின்ற மூங்கிற் கோல்கள் உயர்ந்துவளர்ந்த சோலைகளையுடைய மலைகள் பொருந்திய நாட்டையுடைய தலைவனை வரைவுக்குரியவற்றோடு வருவானென்றுகூறினாள்; ஆதலின் அவள் அமிழ்தத்தைஉண்பாளாக!
முடிபு: அயலிலாட்டி நாடனை வருமென்றோள்; அமிழ்தம் உண்க!
கருத்து: தலைவன் வரைவொடு வருதலை முன்பு கூறி எனக்குஉறுதி யுண்டாக்கிய அயலிலாட்டி வாழ்வாளாக!
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 201. குறிஞ்சி - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, குறிஞ்சி, மூங்கிற், நாடனை, அயலிலாட்டி, அவள், தோழி, எட்டுத்தொகை, சங்க, முன்பு, தலைவன்