குறுந்தொகை - 20. பாலை - தலைவி கூற்று
(தலைவனது பிரிவை உணர்த்திய தோழியை நோக்கி, என்பாலுள்ள அருளையும் அன்பையும் நீக்கிப் பிரிவது அறிவுடையோருக்கு ழகன்று” என்று தலைவி உணர்த்தியது.)
அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின் உரவோர் உரவோர் ஆக மடவம் ஆக மடந்தை நாமே. |
|
- கோப்பெருஞ்சோழன். |
தோழியே அருளையும் அன்பையும் துறந்து தம் துணைவியை விட்டு பொருள் தேடும் முயற்சியின் பொருட்டு பிரியும் செயலை உடைய தலைவர் அறிவுடையவராயின் அந்த ஆற்றலை உடையோர் அறிவுடை யவரே ஆகுக! அவரைப் பிரிந்திருத்தற்குரிய ஆற்றல் இல்லாத நாம் அறிவிலேம் ஆகுக!
முடிபு: மடந்தையே, பிரிவோர் உரவோராகுக! நாம் மடவமாக!
கருத்து: என்னைப் பிரிந்து செல்லுதல் அறிவுடைய தலைவர்க்கு அழகன்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 20. பாலை - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, உரவோர், குறுந்தொகை, பாலை, ஆகுக, நாம், பிரிவோர், அருளையும், எட்டுத்தொகை, சங்க, அன்பையும்