குறுந்தொகை - 187. குறிஞ்சி - தலைவி கூற்று
(வரைபொருட்குப் பிரிந்த தலைவன் நீட்டித்தானாக, அவன் மேற்குறையேற்றி உரையாடிய தோழியை நோக்கி, “அவர் தாம் சென்றவினையை நிறைவேற்றிக் கொண்டு விரைவில் வரும் வன்மையையுடையார்” என்று தலைவி கூறியது.)
செவ்வரைச் சேக்கை வருடை மான்மறி சுரைபொழி தீம்பால் ஆர மாந்திப் பெருவரை நீழ லுகளு நாடன் கல்லினும் வலியன் தோழி வலிய னென்னாது மெலியுமென் னெஞ்சே. |
5 |
- கபிலர். |
தோழி! செவ்வியமலைப் பக்கத்தின் கண் தங்குதலை யுடைய எண் கால் வருடையினது குட்டி தன் தாயின் மடியினின்றும் சுரக்கின்ற இனிய பாலை வயிறு நிறைய உண்டு பெரிய மலைப் பக்கத்திலுள்ள நிழலில் துள்ளுதற் கிடமாகிய நாட்டையுடைய தலைவன்; கல்லைக் காட்டிலும் வன்மையை உடையவன்; என் நெஞ்சு அவன் வன்மையையுடையா னென்று கருதாமல் அவன் திறத்துமெலிவை அடையும்.
முடிபு: தோழி, நாடன் வலியன்; என் நெஞ்சு மெலியும்.
கருத்து: தலைவன் வரைபொருள் பெற்று விரைவில் மீள்வான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 187. குறிஞ்சி - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, அவன், தோழி, குறிஞ்சி, தலைவன், குறுந்தொகை, நெஞ்சு, வலியன், நாடன், எட்டுத்தொகை, விரைவில், சங்க