குறுந்தொகை - 186. முல்லை - தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வரவும் அவன் வாராமையால் தலைவி துயருறுவாள் என்று வருந்திய தோழியை நோக்கி, “தலைவனை நினைந்து துயிலேன் ஆயினேன்” என்று தலைவி கூறியது.)
ஆர்கலி யேற்றொடு கார்தலை மணந்த கொல்லைப் புனத்த முல்லை மென்கொடி எயிறென முகையும் நாடற்குத் துயிறுறந் தனவால் தோழியென் கண்ணே. |
|
- ஒக்கூர் மாசாத்தியார். |
தோழி! என் கண்கள் மிக்க முழக்கத்தையுடைய இடியேற்றோடு மேகம் மழைபெய்து கலந்த முல்லை நிலத்திலுள்ளனவாகிய மெல்லிய முல்லைக் கொடிகள் பற்களைப் போல அரும்பும் நாட்டையுடையதலைவன் பொருட்டு உறக்கத்தையொழிந்தன.
முடிபு: தோழி, என்கண் நாடற்குத் துயில் துறந்தன.
கருத்து: தலைவன் இன்னும் வாராமையின் நான் துயிலொழிந்துவருந்துகின்றேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 186. முல்லை - தலைவி கூற்று, முல்லை, தலைவி, இலக்கியங்கள், குறுந்தொகை, கூற்று, தோழி, நாடற்குத், எட்டுத்தொகை, சங்க, தலைவன்