குறுந்தொகை - 15. பாலை - செவிலி கூற்று
(தலைவி தமரைப் பிரிந்து தலைவனுடன் சென்றதைத் தோழியால்அறிந்த செவிலி, ‘‘நம் மகளும் அவள் அன்பனும் பாலையைக் கடந்து சென்று இதற்குள் மணம் புரிந்து கொண்டிருப்பர்; அதனால் அவர்களுடைய நட்பு உலகறிய உறுதி பெற்றதாகும்’’ என்று நற்றாய்க்குக் கூறியது.)
பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய நாலூர்க் கோசர் நன்மொழி போல வாயா கின்றே தோழி ஆய்கழற் சேயிலை வெள்வேல் விடலையொடு |
5 |
தொகுவளை முன்கை மடந்தை நட்பே. | |
- அவ்வையார். |
தோழி! அழகிய வீரக் கழலை யும் செம்மையாகிய இலையை உடைய வெள்ளிய வேலையும் கொண்ட தலைவனோடு பலவாகத்தொக்க வளைகளைப் பூண்ட முன் கைகளை உடைய நின்மகள் செய்த நட்பானது மிகப்பழைய ஆல மரத்தடியின் கண் உள்ள பொதுவிடத்தில் தங்குதலைக் கொண்டு தோன்றிய நான்கு ஊரில் உள்ள கோசரது நன்மையை உடைய மொழி உண்மையாவதைப் போல முரசு முழங்கவும் சங்கு ஒலிக்கவும் மணம் செய்தலால் உண்மை ஆகியது.
முடிபு: விடலையொடு மடந்தை நட்பு வாயாகின்று.
கருத்து: தலைவி தன் தலைவனுடன் சென்றனள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 15. பாலை - செவிலி கூற்று, இலக்கியங்கள், செவிலி, உடைய, பாலை, குறுந்தொகை, கூற்று, மடந்தை, விடலையொடு, உள்ள, தோழி, தலைவி, எட்டுத்தொகை, சங்க, தலைவனுடன், மணம், நட்பு