குறுந்தொகை - 129. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தலைவியோடு அளவளாவி மீண்ட தலைவனது வாட்டத்தைக் கண்ட பாங்கன், “ நினக்கு இவ்வாட்டம் உண்டாதற்குக் காரணம் யாது?” என்றவழி, “ஒரு மங்கையது நுதல் என் உள்ளத்தைப் பிணித்தது” என்று தலைவன் கூறியது.)
எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப புலவர் தோழ கேளா யத்தை மாக்கடல் நடுவண் எண்ணாட் பக்கத்துப் பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக் கதுப்பயல் விளங்கும் சிறுநுதல் |
5 |
புதுக்கோள் யானையிற் பிணித்தற்றால் எம்மே. | |
- கோப்பெருஞ்சோழன். |
எம் நண்ப இளைஞர் இன்புறுதற்குக் காரணமாகிய நட்பையுடையோய் அறிவுடையாருக்குத் தோழ கேட்பாயாக; பெரிய கடலின் நடுவில் எட்டாந் திதிக்குரிய இளைய வெள்ளிய திங்கள் தோன்றியதைப் போல ஒரு மகளின் கூந்தலுக்கு அயலில் விளங்குகின்ற சிறிய நெற்றி புதிதாகப் பிடிக்கப்பட்ட யானையைப் போல எம்மைப் பிணித்தது.
முடிபு: எலுவ, நண்ப, தோழ, கேளாய்: சிறுநுதல் எம்மைப் பிணித்தற்று.
கருத்து: ஓர் அழகிய மகள் என் நெஞ்சத்தைக் கவர்ந்தாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 129. குறிஞ்சி - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், குறிஞ்சி, நண்ப, குறுந்தொகை, கூற்று, சிறுநுதல், எம்மைப், திங்கள், சங்க, எட்டுத்தொகை, எலுவ