குறுந்தொகை - 121. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவன் செய்த குறியென்று பிறிதொன்றை யெண்ணிச் சென்று அவனை எதிர்ப்படப்பெறாமல் ஒரு நாள் மீண்ட தலைவி, பின் ஒரு நாள் அவன் வந்தமை கூறிய தோழியை நோக்கி, “நீ உரைப்பது உண்மையோ? முன் அவன் வாராமையால் துன்புறுகின்றேன்” என்று கூறியது.)
மெய்யே வாழி தோழி சாரல் மைபட் டன்ன மாமுக முசுக்கலை ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற கோட்டொடு போகி யாங்கு நாடன் தான்குறி வாயாத் தப்பற்குத் |
5 |
தாம்பசந் தனஎன் தடமென் தோளே. | |
- கபிலர். |
தோழி! இப்பொழுது தலைவன் வந்ததாக நீ கூறியது உண்மையோ? முன்பு மலைப்பக்கத்தில் மைப்பட்டாற் போன்ற கரிய முகத்தையுடைய ஆண்குரங்கு கொம்பு தாங்கும்படி பாயாத தவற்றினது பயன் அக்குரங்கை ஏற்றுக்கொண்டு முறிந்த அக் கொம்பினிடத்துச் சென்றாற் போல தலைவன் குறிப்பை வாய்ப்பச் செய்யாத தவற்றின் பொருட்டு என்னுடைய பரந்த மெல்லிய தோள்கள் பசலையை அடைந்தன.
முடிபு: தோழி, மெய்யோ? நாடன் தப்பற்கு என் தோள் பசந்தன.
கருத்து: ஏற்ற குறியைச் செய்யாது முன்னர்த் தவறிய தலைவன் இப்போது வந்தான் என்று நீ கூறுதல் மெய்யோ?
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 121. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவன், தலைவி, குறுந்தொகை, கூற்று, தோழி, குறிஞ்சி, ஏற்ற, கூறியது, மெய்யோ, நாடன், நாள், எட்டுத்தொகை, சங்க, அவன், உண்மையோ