குறுந்தொகை - 107. மருதம் - தலைவி கூற்று
(பொருள்வயிற் பிரிந்த தலைவன் மீண்டு வரப்பெற்று அவனோடு இன்புற்ற தலைவி பொழுது புலர்ந்தமையால் துயருற்று, “எம்மைத் துயிலினின்றும் எழுப்பிய சேவலே! நீ இறந்து படுவாயாக” என்று கூறித் தன் காமமிகுதியைப் புலப்படுத்தியது.)
குவியிணர்த் தோன்றி ஒண்பூ வன்ன தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல் நள்ளிருள் யாமத் தில்லெலி பார்க்கும் பிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக் கடுநவைப் படீஇயரோ நீயே நெடுநீர் |
5 |
யாணர்ஊரன் தன்னொடு வதிந்த ஏம இன்துயில் எடுப்பி யோயே. |
|
- மதுரைக் கண்ணனார். |
குவிந்த கொத்துக்களையுடைய செங்காந்தளினது ஒள்ளிய பூவைப் போன்ற தொக்க சிவந்த கொண்டையையுடைய கூட்டங்கொண்ட சேவலே ஆழமாகிய நீரினால் உண்டாகும் புது வருவாயையுடைய ஊரையுடைய தலைவனோடு தங்கிய இன்பத்தைத் தரும் இனிய துயிலினின்றும் எம்மை எழுப்பினை; நீ செறிந்த இருளையுடைய இடையிரவின் கண் வீட்டிலுள்ள எலிகளை உண்ணும் பொருட்டு ஆராயும் காட்டுப் பூனையின் குட்டிக்கு சிலநாள் இட்டு வைத்துண்ணும் உணவாகி மிக்க துன்பத்தை அடைக.
முடிபு: சேவல், துயில் எடுப்பியோய்; நீ கடுநவைப்படீஇயர்.
கருத்து: பொழுது புலர்ந்தமையால் நான் துன்புறுவேனாயினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 107. மருதம் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, மருதம், குறுந்தொகை, கூற்று, சேவலே, துயிலினின்றும், சேவல், சங்க, எட்டுத்தொகை, பொழுது, புலர்ந்தமையால்