குறுந்தொகை - 1. குறிஞ்சி - தோழி கூற்று
(பாங்கியிற் கூட்டத்தை விரும்பிய தலைமகன் செங்காந்தள் பூவைக் கையுறையாகக் கொடுத்துத் தோழியின்பால் தன் குறை கூறிய வழி அவள், “இஃது எமது மலையிடத்தும் உள்ளதாதலின் இதனை வேண்டேம்” என்று மறுத்துக் கூறியது.)
செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக் கழல்தொடிச் சேஎய் குன்றம் குருதிப் பூவின் குலைக்காந் தட்டே. |
|
- திப்புத் தோளார். |
வெற்ப போர்க்களம் இரத்தத்தால் செந்நிறத்தை உடைய களமாகும்படி அசுரர்களைக் கொன்று இல்லை ஆக்கிய இரத்தத்தால் சிவந்த திரண்ட அம்பையும் சிவந்த கொம்பினை உடைய யானையையும் உழல இட்ட வீர வளையையும் உடைய முருகக் கடவுளுக்குரிய இம் மலையானது சிவப்பாகிய பூங்கொத்துள்ள காந்தளை உடையது.
முடிபு: சேயினது குன்றம் காந்தட்டு.
கருத்து: காந்தள் பூவால் குறைவிலேமாதலின் நின் கையுறையை ஏலேமென்றபடி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 1. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், உடைய, குறிஞ்சி, குறுந்தொகை, தோழி, கூற்று, இரத்தத்தால், சிவந்த, சங்க, எட்டுத்தொகை, குன்றம்