குறுந்தொகை - கடவுள் வாழ்த்து
தாமரை புரையுங் காமர் சேவடிப் பவழத் தன்ன மேனித் திகழொளிக் குன்றி யேய்க்கும் உடுக்கைக் குன்றின் நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேற் சேவலங் கொடியோன் காப்ப |
5 |
ஏம வைகல் எய்தின்றால் உலகே. | |
- பாரதம் பாடிய பெருந்தேவனார். |
தாமரை மலரைப் போன்ற அழகிய செம்மையாகிய திருவடியையும் பவழத்தை ஒத்தசிவந்த நிறத்தை யும் விளங்கா நின்ற ஒளியையும் குன்றிமணியை ஒக்கும் சிவந்த ஆடை யையும் கிரவுஞ்ச மலையினது நடுவிடம் பிளக்கும்படி வீசிய அழகிய ஒளியை உடைய நெடிய வேற் படையையும் கோழிச் சேவலை வரைந்த கொடியையு முடைய முருகக் கடவுள் பாதுகாத்து அருளுவதால் உலகத்தில் உள்ள உயிர்கள் இன்ப மயமாகிய நாட்களை அடையா நின்றன; ஆதலின் உலகிற்கு இடையூறு இல்லை என்றவாறு.
முடிபு: அடியையும் மேனியையும் ஒளியையும் உடுக்கையையும் வேலையும் சேவற் கொடியையும் உடைய முருகவேள் காப்ப உலகு ஏம வைகலை எய்தியது.
கருத்து: முருகக் கடவுளின் இத் திருவுருவைத் தியானம் பண்ணுக; பண்ணின் எல்லா நலமும் எய்தலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - கடவுள் வாழ்த்து, கடவுள், இலக்கியங்கள், வாழ்த்து, குறுந்தொகை, ஒளியையும், உடைய, முருகக், அழகிய, தாமரை, எட்டுத்தொகை, சங்க, காப்ப