கலித்தொகை - கலித்தொகை - பாலைக் கலி - 8
நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்க, கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல, ஞாயிறு கடுகுபு கதிர் மூட்டிக் காய் சினம் தெறுதலின், உறல் ஊறு கமழ் கடாஅத்து ஒல்கிய எழில் வேழம், வறன் உழு நாஞ்சில் போல், மருப்பு ஊன்றி நிலம் சேர; | 5 |
விறன் மலை வெம்பிய போக்கு அரு வெஞ் சுரம் சொல்லாது இறப்பத் துணிந்தனிர்க்கு ஒரு பொருள் சொல்லுவது உடையேன்; கேண்மின், மற்று ஐஇய! வீழுநர்க்கு இறைச்சியாய் விரல் கவர்பு இசைக்கும் கோல் ஏழும் தம் பயன் கெட, இடை நின்ற நரம்பு அறூஉம் | 10 |
யாழினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ? மரீஇத் தாம் கொண்டாரைக் கொண்டக்கால் போலாது, பிரியுங்கால் பிறர் எள்ள, பீடு இன்றிப் புறம் மாறும் திருவினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ? புரை தவப் பயன் நோக்கார் தம் ஆக்கம் முயல்வாரை | 15 |
வரைவு இன்றிச் செறும் பொழுதில், கண் ஓடாது உயிர் வௌவும் அரைசினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ? எனவாங்கு; நச்சல் கூடாது பெரும! இச் செலவு ஒழிதல் வேண்டுவல், சூழின், பழி இன்று; | 20 |
மன்னவன் புறந்தர, வரு விருந்து ஓம்பி, தன் நகர் விழையக் கூடின், இன் உறல் வியன் மார்ப! அது மனும் பொருளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - பாலைக் கலி - 8, இலக்கியங்கள், கலித்தொகை, நிலை, இல்லாப், பொருளையும், பாலைக், கலித்தொகை, நச்சுபவோ, பயன், மன்னவன், எட்டுத்தொகை, சங்க, கோல், உறல்