கலித்தொகை - கலித்தொகை - பாலைக் கலி - 7
வேனில் உழந்த வறிது உயங்கும் ஒய் களிறு வான் நீங்கு வைப்பின் வழங்காத் தேர் நீர்க்கு அவாஅம் கானம் கடத்திர், எனக் கேட்பின், யான் ஒன்று உசாவுகோ-ஐய! சிறிது;- நீயே, செய் வினை மருங்கில் செலவு, அயர்ந்து, யாழ நின் | 5 |
கை புனை வல் வில் ஞாண் உளர்தீயே; இவட்கே, செய்வு உறு மண்டிலம் மையாப்பது போல், மை இல் வாண் முகம் பசப்பு ஊரும்மே; நீயே, வினை மாண் காழகம் வீங்கக் கட்டி, புனை மாண் மரீஇய அம்பு தெரிதியே; | 10 |
இவட்கே, சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல், இனை நோக்கு உண்கண் நீர் நில்லாவே; நீயே, புலம்பு இல் உள்ளமொடு பொருள்வயிற் செலீஇய, வலம் படு திகிரி வாய் நீவுதியே; இவட்கே, அலங்கு இதழ்க் கோடல் வீ உகுபவை போல், | 15 |
இலங்கு ஏர் எல் வளை இறை ஊரும்மே என நின், செல் நவை அரவத்தும் இனையவள் நீ நீப்பின், தன் நலம் கடைகொளப்படுதலின், மற்று இவள் இன் உயிர் தருதலும் ஆற்றுமோ- | 20 |
முன்னிய தேஎத்து முயன்று செய் பொருளே? |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - பாலைக் கலி - 7, இலக்கியங்கள், கலித்தொகை, இவட்கே, போல், மாண், நீயே, கலித்தொகை, பாலைக், எட்டுத்தொகை, ஊரும்மே, புனை, செய், வினை, சங்க