கலித்தொகை - கலித்தொகை - பாலைக் கலி - 23
இலங்கு ஒளி மருப்பின் கைம்மா உளம்புநர், புலம் கடி கவணையின், பூஞ் சினை உதிர்க்கும் விலங்கு மலை வெம்பிய போக்கு அரு வெஞ் சுரம் தனியே இறப்ப, யான் ஒழிந்திருத்தல் நகுதக்கன்று, இவ் அழுங்கல் ஊர்க்கே: | 5 |
இனி யான், உண்ணலும் உண்ணேன்; வாழலும் வாழேன் தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர் வேள் நீர் உண்ட குடை ஓரன்னர்; நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோர் | 10 |
அல்குநர் போகிய ஊர் ஓரன்னர்; கூடினர் புரிந்து குணன் உணப்பட்டோர் சூடினர் இட்ட பூ ஓரன்னர்; என ஆங்கு, யானும் நின்னகத்து அனையேன்; ஆனாது, | 15 |
கொலை வெங் கொள்கையொடு நாய் அகப்படுப்ப, வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல, நின் ஆங்கு வரூஉம் என் நெஞ்சினை என் ஆங்கு வாராது ஓம்பினை கொண்மே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - பாலைக் கலி - 23, இலக்கியங்கள், கலித்தொகை, ஓரன்னர், ஆங்கு, கலித்தொகை, பாலைக், புரிந்து, சங்க, எட்டுத்தொகை, யான்