கலித்தொகை - கலித்தொகை - பாலைக் கலி - 22
உண் கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும், தாம் கொண்டது கொடுக்குங்கால் முகனும், வேறாகுதல் பண்டும் இவ் உலகத்து இயற்கை; அஃது இன்றும் புதுவது அன்றே புலனுடை மாந்திர்! தாய் உயிர் பெய்த பாவை போல, | 5 |
நலன் உடையார் மொழிக்கண் தாவார்; தாம் தம் நலம் தாது தேர் பறவையின் அருந்து, இறல் கொடுக்குங்கால், ஏதிலார் கூறுவது எவனோ, நின் பொருள் வேட்கை; நறு முல்லை நேர் முகை ஒப்ப நிரைத்த செறி முறை பாராட்டினாய்; மற்று, எம் பல்லின் | 10 |
பறி முறை பாராட்டினையோ? ஐய! நெய் இடை நீவி மணி ஒளி விட்டன்ன ஐவகை பாராட்டினாய்; மற்று, எம் கூந்தல் செய்வினை பாராட்டினையோ? ஐய! குளன் அணி தாமரைப் பாசரும்பு ஏய்க்கும் | 15 |
இள முலை பாராட்டினாய்; மற்று, எம் மார்பில் தளர் முலை பாராட்டினையோ? ஐய! என ஆங்கு, அடர் பொன் அவிர் ஏய்க்கும் அவ் வரி வாட, சுடர் காய் சுரம் போகும் நும்மை யாம் எங்கண் | 20 |
படர் கூற நின்றதும் உண்டோ ? தொடர் கூர, துவ்வாமை வந்தக்கடை. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - பாலைக் கலி - 22, இலக்கியங்கள், கலித்தொகை, பாராட்டினாய், மற்று, பாராட்டினையோ, பாலைக், கலித்தொகை, முலை, முறை, முகனும், எட்டுத்தொகை, சங்க, தாம், கொடுக்குங்கால்