கலித்தொகை - கலித்தொகை - பாலைக் கலி - 24
'நெஞ்சு நடுக்குறக் கேட்டும், கடுத்தும், தாம் அஞ்சியது ஆங்கே அணங்காகும்'என்னும் சொல் இன் தீம் கிளவியாய்! வாய் மன்ற நின் கேள் புதுவது பல் நாளும் பாராட்ட, யானும், 'இது ஒன்று உடைத்து' என எண்ணி, அது தேர, | 5 |
மாசு இல் வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள், பாயல் கொண்டு என் தோள் கனவுவார், 'ஆய் கோல் தொடி நிரை முன் கையாள் கையாறு கொள்ளாள், கடி மனை காத்து, ஓம்ப வல்லுவள்கொல்லோ இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும் | 10 |
நெடு மலை வெஞ் சுரம் போகி, நடு நின்றெஞ், செய் பொருள் முற்றும் அளவு?' என்றார்; ஆயிழாய்! தாம் இடை கொண்டது அதுவாயின், தம் இன்றி யாம் உயிர் வாழும் மதுகை இலேமாயின், 'தொய்யில் துறந்தார் அவர்' என, தம்வயின், | 15 |
நொய்யார் நுவலும் பழி நிற்ப, தம்மொடு போயின்று, சொல், என் உயிர். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - பாலைக் கலி - 24, இலக்கியங்கள், கலித்தொகை, கலித்தொகை, பாலைக், சொல், உயிர், சங்க, எட்டுத்தொகை, தாம்