கலித்தொகை - கலித்தொகை - முல்லைக் கலி 112
யார் இவன், என்னை விலக்குவான்? நீர் உளர் பூந் தாமரைப் போது தந்த விரவுத் தார்க் கல்லாப் பொதுவனை; நீ மாறு; நின்னொடு சொல்லல் ஓம்பு என்றார், எமர்; எல்லா! 'கடாஅய கண்ணால், கலைஇய நோய் செய்யும் | 5 |
நடாஅக் கரும்பு அமன்ற தோளாரைக் காணின், விடாஅல்; ஓம்பு' என்றார், எமர்; கடாஅயார், நல்லாரைக் காணின், விலக்கி, நயந்து, அவர் பல் இதழ் உண்கண்ணும் தோளும் புகழ் பாட, நல்லது கற்பித்தார் மன்ற; நுமர் பெரிதும் | 10 |
வல்லர், எமர்கண் செயல் ஓஒ! வழங்காப் பொழுது, நீ கன்று மேய்ப்பாய் போல், வழங்கல் அறிவார் உரையாரேல், எம்மை இகழ்ந்தாரே அன்றோ, எமர்; ஒக்கும்; அறிவல் யான் எல்லா! விடு; | 15 |
'விடேன், யான்; என், நீ குறித்தது? இருங் கூந்தால்! நின்னை, "என் முன் நின்று, சொல்லல் ஓம்பு" என்றமை அன்றி, "அவனை நீ புல்லல் ஓம்பு" என்றது உடையரோ? மெல்ல முயங்கு; நின் முள் எயிறு உண்கும் 'எவன்கொலோ? | 20 |
மாயப் பொதுவன் உரைத்த உரை எல்லாம் வாய் ஆவதுஆயின், தலைப்பட்டாம்; பொய்ஆயின், சாயல் இன் மார்பில் கமழ்தார் குழைத்த நின் ஆய் இதழ் உண்கண் பசப்ப, தட மென் தோள் சாயினும், ஏஎர் உடைத்து.' | 25 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - முல்லைக் கலி 112, இலக்கியங்கள், எமர், கலித்தொகை, முல்லைக், கலித்தொகை, யான், ஓம்பு", நின், இதழ், ", என்றார், எட்டுத்தொகை, சங்க, சொல்லல், எல்லா, காணின்