அகநானூறு - 397. பாலை
என் மகள் பெரு மடம் யான் பாராட்ட, தாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப, முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர், மணன் இடையாகக் கொள்ளான், 'கல் பகக் கண மழை துறந்த கான் மயங்கு அழுவம் |
5 |
எளியவாக, ஏந்து கொடி பரந்த பொறி வரி அல்குல் மாஅயோட்கு' எனத் தணிந்த பருவம் செல்லான், படர்தரத் துணிந்தோன்மன்ற துனை வெங் காளை கடும் பகட்டு ஒருத்தல் நடுங்கக் குத்தி, |
10 |
போழ் புண் படுத்த பொரி அரை ஓமைப் பெரும் பொளிச் சேயரை நோக்கி, ஊன் செத்து, கருங் கால் யாஅத்துப் பருந்து வந்து இறுக்கும் சேண் உயர்ந்து ஓங்கிய வான் உயர் நெடுங் கோட்டுக் கோடை வெவ் வளிக்கு உலமரும் |
15 |
புல் இலை வெதிர நெல் விளை காடே. |
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 397. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க