அகநானூறு - 389. பாலை
அறியாய் வாழி, தோழி! நெறி குரல் சாந்து ஆர் கூந்தல் உளரி, போது அணிந்து, தேம் கமழ் திரு நுதல் திலகம் தைஇயும், பல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறு பட நல் இள வன முலை அல்லியொடு அப்பியும், |
5 |
பெருந் தோள் தொய்யில் வரித்தும், சிறு பரட்டு அம் செஞ் சீறடிப் பஞ்சி ஊட்டியும், எற் புறந்தந்து, நிற் பாராட்டி, பல் பூஞ் சேக்கையின் பகலும் நீங்கார், மனைவயின் இருப்பவர்மன்னே துனைதந்து, |
10 |
இரப்போர் ஏந்து கை நிறைய, புரப்போர் புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும் அரும் பொருள் வேட்டம் எண்ணி, கறுத்தோர் சிறு புன் கிளவிச் செல்லல் பாழ்பட, நல் இசை தம் வயின் நிறுமார், வல் வேல் |
15 |
வான வரம்பன் நல் நாட்டு உம்பர், வேனில் நீடிய வெங் கடற்று அடை முதல், ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலற, கொலை வெம்மையின் நிலை பெயர்ந்து உறையும் பெருங் களிறு தொலைச்சிய இருங் கேழ் ஏற்றை |
20 |
செம் புல மருங்கில் தன் கால் வாங்கி, வலம் படு வென்றியொடு சிலம்பகம் சிலம்ப, படு மழை உருமின் முழங்கும் நெடு மர மருங்கின் மலை இறந்தோரே! |
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது. - நக்கீரனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 389. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, சிறு, வேறு, சங்க, எட்டுத்தொகை