அகநானூறு - 388. குறிஞ்சி
அம்ம வாழி, தோழி நம் மலை அமை அறுத்து இயற்றிய வெவ் வாய்த் தட்டையின், நறு விரை ஆரம் அற எறிந்து உழுத உளைக் குரல் சிறு தினை கவர்தலின், கிளை அமல் பெரு வரை அடுக்கத்துக் குரீஇ ஓப்பி, |
5 |
ஓங்கு இருஞ் சிலம்பின் ஒள் இணர் நறு வீ வேங்கை அம் கவட்டிடை நிவந்த இதணத்து, பொன் மருள் நறுந் தாது ஊதும் தும்பி இன் இசை ஓரா இருந்தனமாக, 'மை ஈர் ஓதி மட நல்லீரே! |
10 |
நொவ்வு இயற் பகழி பாய்ந்தென, புண் கூர்ந்து, எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும் புனத்துழிப் போகல் உறுமோ மற்று?' என, சினவுக் கொள் ஞமலி செயிர்த்துப் புடை ஆட, சொல்லிக் கழிந்த வல் விற் காளை |
15 |
சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து, ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள், நன்னர் நெஞ்சமொடு மயங்கி, 'வெறி' என, அன்னை தந்த முது வாய் வேலன், 'எம் இறை அணங்கலின் வந்தன்று, இந் நோய்; |
20 |
தணி மருந்து அறிவல்' என்னும்ஆயின், வினவின் எவனோ மற்றே 'கனல் சின மையல் வேழ மெய் உளம்போக, ஊட்டியன்ன ஊன் புரள் அம்பொடு காட்டு மான் அடி வழி ஒற்றி, |
25 |
வேட்டம் செல்லுமோ, நும் இறை?' எனவே? |
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - ஊட்டியார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 388. குறிஞ்சி , இலக்கியங்கள், அகநானூறு, குறிஞ்சி, நும், தோழி, சங்க, எட்டுத்தொகை