அகநானூறு - 311. பாலை
இரும் பிடிப் பரிசிலர் போலக் கடை நின்று, அருங் கடிக் காப்பின் அகல் நகர் ஒரு சிறை, எழுதியன்ன திண் நிலைக் கதவம் கழுது வழங்கு அரை நாள், காவலர் மடிந்தென, திறந்து நப் புணர்ந்து, 'நும்மின் சிறந்தோர் |
5 |
இம்மை உலகத்து இல்' எனப் பல் நாள் பொம்மல் ஓதி நீவிய காதலொடு, பயம் தலைப்பெயர்ந்து மாதிரம் வெம்ப, வருவழி வம்பலர்ப் பேணி, கோவலர் மழ விடைப் பூட்டிய குழாஅய்த் தீம் புளி |
10 |
செவி அடை தீரத் தேக்கிலைப் பகுக்கும் புல்லி நல் நாட்டு உம்பர், செல் அருஞ் சுரம் இறந்து ஏகினும், நீடலர் அருள் மொழித் தேற்றி, நம் அகன்றிசினோரே. |
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 311. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, நாள், எட்டுத்தொகை, சங்க