அகநானூறு - 310. நெய்தல்
கடுந் தேர் இளையரொடு நீக்கி, நின்ற நெடுந் தகை நீர்மையை அன்றி, நீயும், தொழுதகு மெய்யை, அழிவு முந்துறுத்து, பல் நாள் வந்து, பணி மொழி பயிற்றலின், குவளை உண்கண் கலுழ, நின்மாட்டு |
5 |
இவளும் பெரும் பேதுற்றனள்; ஓரும் தாயுடை நெடு நகர்த் தமர் பாராட்ட, காதலின் வளர்ந்த மாதர்ஆகலின், பெரு மடம் உடையரோ, சிறிதே; அதனால், குன்றின் தோன்றும் குவவு மணற் சேர்ப்ப! |
10 |
இன்று இவண் விரும்பாதீமோ! சென்று, அப் பூ விரி புன்னைமீது தோன்று பெண்ணைக் கூஉம் கண்ணஃதே தெய்ய ஆங்க உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த இளைப் படு பேடை இரிய, குரைத்து எழுந்து |
15 |
உரும் இசைப் புணரி உடைதரும் பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே. |
தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி சொல்லியது. - நக்கீரனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 310. நெய்தல் , இலக்கியங்கள், நெய்தல், அகநானூறு, எட்டுத்தொகை, சங்க