அகநானூறு - 210. நெய்தல்
குறியிறைக் குரம்பைக் கொலை வெம் பரதவர் எறிஉளி பொருத ஏமுறு பெரு மீன் புண் உமிழ் குருதி புலவுக் கடல் மறுப்பட, விசும்பு அணி வில்லின் போகி, பசும் பிசிர்த் திரை பயில் அழுவம் உழக்கி, உரன் அழிந்து, |
5 |
நிரைதிமில் மருங்கில் படர்தரும் துறைவன், பானாள் இரவில், நம் பணைத் தோள் உள்ளி, தான் இவண் வந்த காலை, நம் ஊர்க் கானல்அம் பெருந் துறை, கவின் பாராட்டி, ஆனாது புகழ்ந்திசினோனே; இனி, தன் |
10 |
சாயல் மார்பின் பாயல் மாற்றி, 'கைதை அம் படு சினைக் கடுந் தேர் விலங்கச் செலவு அரிது என்னும்' என்பது பல கேட்டனமால் தோழி! நாமே. |
தோழி தலைமகன் சிறைப்புறமாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - உலோச்சனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 210. நெய்தல் , இலக்கியங்கள், நெய்தல், அகநானூறு, தோழி, எட்டுத்தொகை, சங்க