அகநானூறு - 209. பாலை
'தோளும் தொல் கவின் தொலைந்தன; நாளும் அன்னையும் அருந் துயர் உற்றனள்; அலரே, பொன் அணி நெடுந் தேர்த் தென்னர் கோமான், எழு உறழ் திணி தோள் இயல் தேர்ச் செழியன், நேரா எழுவர் அடிப்படக் கடந்த |
5 |
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது' என, ஆழல் வாழி, தோழி! அவரே, மாஅல் யானை மறப் போர்ப் புல்லி காம்புடை நெடு வரை வேங்கடத்து உம்பர் அறை இறந்து அகன்றனர் ஆயினும், நிறை இறந்து |
10 |
உள்ளார்ஆதலோ அரிதே செவ் வேல் முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி செல்லா நல் இசை நிறுத்த வல் வில் ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லி, |
15 |
நிலை பெறு கடவுள் ஆக்கிய, பலர் புகழ் பாவை அன்ன நின் நலன |
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - கல்லாடனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 209. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, செவ், இறந்து, சங்க, எட்டுத்தொகை, தோழி