அகநானூறு - 208. குறிஞ்சி
யாம இரவின் நெடுங் கடை நின்று, தேம் முதிர் சிமையக் குன்றம் பாடும் நுண் கோல் அகவுநர் வேண்டின், வெண் கோட்டு அண்ணல் யானை ஈயும் வண் மகிழ் வெளியன் வேண்மான் ஆஅய் எயினன், |
5 |
அளி இயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை, இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து, ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்தென, 'புள் ஒருங்கு அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று |
10 |
ஒண் கதிர் தெறாமை, சிறகரின் கோலி, நிழல் செய்து உழறல் காணேன், யான்' எனப் படுகளம் காண்டல்செல்லான், சினம் சிறந்து, உரு வினை நன்னன், அருளான், கரப்ப, பெரு விதுப்புற்ற பல் வேள் மகளிர் |
15 |
குரூஉப் பூம் பைந் தார் அருக்கிய பூசல், வசை விடக் கடக்கும் வயங்கு பெருந் தானை அகுதை கிளைதந்தாங்கு, மிகு பெயல் உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல, நாணு வரை நில்லாக் காமம் நண்ணி, |
20 |
நல்கினள், வாழியர், வந்தே ஓரி பல் பழப் பலவின் பயம் கெழு கொல்லிக் கார் மலர் கடுப்ப நாறும், ஏர் நுண், ஓதி மாஅயோளே! |
புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 208. குறிஞ்சி , இலக்கியங்கள், அகநானூறு, குறிஞ்சி, இயல், யானை, சங்க, எட்டுத்தொகை, நுண்