அகநானூறு - 133. பாலை
'குன்றி அன்ன கண்ண, குரூஉ மயிர், புன் தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி, நல் நாள் வேங்கை வீ நன்கனம் வரிப்ப, கார் தலைமணந்த பைம் புதற் புறவின், |
5 |
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும் கொல்லை இதைய குறும் பொறை மருங்கில், கரி பரந்தன்ன காயாஞ் செம்மலொடு எரி பரந்தன்ன இலமலர் விரைஇ, பூங் கலுழ் சுமந்த தீம் புனற் கான் யாற்று |
10 |
வான் கொள் தூவல் வளி தர உண்கும்; எம்மொடு வருதல் வல்லையோ மற்று?' எனக் கொன் ஒன்று வினவினர்மன்னே தோழி! இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி கொல் புனக் குருந்தொடு கல் அறைத் தாஅம் |
15 |
மிளை நாட்டு அத்தத்து ஈர்ஞ் சுவற் கலித்த வரி மரற் கறிக்கும் மடப் பிணைத் திரிமருப்பு இரலைய காடு இறந்தோரே. |
'பிரிவிடை ஆற்றாளாயினாள்' எனக் கவன்ற தோழிக்கு, தலைமகள், 'ஆற்றுவல்' என்பது பட, சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 133. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, எனக், பரந்தன்ன, சங்க, எட்டுத்தொகை