அகநானூறு - 134. முல்லை
வானம் வாய்ப்பக் கவினி, கானம் கமஞ் சூல் மா மழை கார் பயந்து இறுத்தென, மணி மருள் பூவை அணி மலர் இடைஇடை, செம் புற மூதாய் பரத்தலின், நன் பல முல்லை வீ கழல் தாஅய், வல்லோன் |
5 |
செய்கை அன்ன செந் நிலப் புறவின்; வாஅப் பாணி வயங்கு தொழிற் கலிமாத் தாஅத் தாள் இணை மெல்ல ஒதுங்க, இடி மறந்து, ஏமதி வலவ! குவிமுகை வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த |
10 |
ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு கணைக் கால் அம் பிணைக் காமர் புணர் நிலை கடுமான் தேர் ஒலி கேட்பின், நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே. |
வினை முற்றி மீண்ட தலைமகன் பாகற்கு உரைத்தது. - சீத்தலைச் சாத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 134. முல்லை , இலக்கியங்கள், முல்லை, அகநானூறு, அன்ன, எட்டுத்தொகை, சங்க